கனமழை எதிரொலி!: நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
Rain Alert School College Leave Dec 2
Rain Alert School College Leave Dec 2: கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நாளை (டிச. 2) காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நாளை (டிச. 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மொத்தம் 4 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதலே வடகிழக்குப் பருவமழை கனமழை பெய்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
மேலும், பல மாவட்டங்களில் மழை நீடிப்பதால் அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.