மகளிருக்கு ரூ.2,500 வழங்கும் திட்டம்! முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு? புதிய விண்ணப்பம் எப்போது?
CM Vijay 2500 Magalir Scheme Application Details
சென்னை:
CM Vijay 2500 Magalir Scheme Application Details :தமிழகத்தில் உள்ள தகுதியான பெண்களுக்கு மாதம் தோறும் நிதியுதவி வழங்கும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ (Madhippumigu Magalir Thittam) மூலம் ரூ.2,500 வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த தமிழக அரசு தற்போது முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதலமைச்சர் விஜய் விரைவில் அறிவிப்பு?:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, பெண்கள் மத்தியில் இந்த ரூ.2,500 உதவித்தொகை எப்போது முழுமையாகக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ முக்கிய அறிவிப்பை முதலமைச்சர் விஜய் அவர்கள் விரைவில் வெளியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
3 மாதங்களுக்குள் புதிய விண்ணப்பங்கள்:
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, இந்தத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி, விடுபட்ட மற்றும் தகுதியான புதிய பயனாளர்களை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய பயனாளர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அதிரடி:
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாகவே இந்த புதிய விண்ணப்பங்களைப் பெற்று, தகுதியான பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை முழுமையாக நிறைவு செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் விடுபட்ட லட்சக்கணக்கான பெண்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
