புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்கும் தகுதி என்ன?- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்! How To Apply Puthumai Pen Thittam Scheme 2025

புதுமைப்பெண் திட்டம் விண்ணப்பிக்கும் தகுதி என்ன?- எவ்வாறு விண்ணப்பிப்பது முழு விவரம்!

How To Apply Puthumai Pen Thittam Scheme 2025

புதுமைப்பெண் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான முக்கிய தகுதிகள் பின்வருமாறு:

  •  How To Apply Puthumai Pen Thittam Scheme 2025 கல்வித் தகுதி: 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்திருக்க வேண்டும்.
  • உயர் கல்வி: உயர்கல்வி, டிப்ளமோ அல்லது ஐடிஐ படிப்பு பயிலும் மாணவிகளாக இருக்க வேண்டும்.
  • கல்லூரி சேர்க்கை: கல்லூரியில் முதன்முறையாக சேரும் மாணவிகளுக்கும், ஏற்கனவே படிக்கும் மாணவிகளுக்கும் இது பொருந்தும்.
  • உதவித்தொகை: இளங்கலை படிப்பு முடியும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
  • வங்கி கணக்கு: வங்கி கணக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

How To Apply Puthumai Pen Thittam Scheme 2025

முக்கிய குறிப்புகள்:

  • அஞ்சல்வழி கல்வி அல்லது அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது.
  • ஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் இருந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழ் உதவி பெறலாம்.
  • மாணவிகள் தங்கள் கல்வி நிறுவனங்கள் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். நேரடியாக விண்ணப்பிக்கக்கூடாது.
  • திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினர்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

  • புதுமைப்பெண் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் http://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
  • விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து மேலும் விவரங்களை, அந்தந்த கல்வி நிறுவனங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் திட்டம், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Leave a Comment