மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் அற்புதமான அரசு திட்டம், யாருக்கெல்லாம் கிடைக்கும்? Atal Pension Yojana Scheme Details Tamil

மாதம் ரூ.5000 ஓய்வூதியம் தரும் அற்புதமான அரசு திட்டம், யாருக்கெல்லாம் கிடைக்கும்?

Atal Pension Yojana Scheme Details Tamil

Atal Pension Yojana Scheme Details Tamil: மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, குறிப்பாகத் தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு, நிதிப் பாதுகாப்பு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Atal Pension Yojana Scheme Details Tamil

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

அடல் ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  • நோக்கம்: முதுமையில் நிதி ரீதியான பாதுகாப்பை உறுதி செய்வது. விவசாயத் தொழிலாளர்கள், ரிக்‌ஷா ஓட்டுநர்கள், வீட்டு உதவியாளர்கள் போன்றவர்களுக்கு முதுமையில் எந்தவித ஆதரவும் இல்லாத நிலையில், இத்திட்டம் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
  • திட்டம் தொடங்கிய நாள்: மே 9, 2025 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • ஓய்வூதியம்: இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் 60 வயதை அடைந்த பிறகு, மாதம் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.
  • பாதுகாப்பு: இது குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிப்பதால், இதில் செய்யப்படும் முதலீடுகள் மிகவும் பாதுகாப்பானவை.
  • குடும்ப ஓய்வூதியம்: சந்தாதாரர் இறந்தால், அவரது வாழ்க்கைத் துணைவர் அதே ஓய்வூதியத் தொகையைப் பெறுவார். இருவரும் இறந்தால், முழுத் தொகையும் நாமினிக்கு அளிக்கப்படும்.
  • திட்டத்தை பாதியில் நிறுத்துதல்: தேவைப்பட்டால், சந்தாதாரர் இத்திட்டத்தைப் பாதியில் நிறுத்தி, அதுவரை டெபாசிட் செய்த தொகையைத் திரும்பப் பெறலாம்.

Leave a Comment