Diwali Holiday: தீபாவளி விடுமுறை தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை?
Diwali Holiday 4 Days Expected News
பொதுமக்கள், ஊழியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு!
Diwali Holiday 4 Days Expected News: இந்த ஆண்டு தீபாவளிக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி (திங்கட்கிழமை) வருவதால், இந்த எதிர்பார்ப்பு வலுப்பெற்றுள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு முந்தைய இரு நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையாகும். திங்கட்கிழமை தீபாவளிப் பண்டிகை என்பதால், செவ்வாய்க்கிழமையும் அரசு விடுமுறை அளித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
முன்கூட்டியே அறிவிக்க வேண்டியதன் அவசியம்
பொதுவாக, தீபாவளி நெருங்கும் சமயத்தில்தான் அரசு இதுபோல விடுமுறை குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், வெளியூர் சென்று பண்டிகையைக் கொண்டாட திட்டமிட்டுள்ளவர்களுக்கு இது சிரமமாக உள்ளது.
எனவே, அரசு இந்த முறை முன்கூட்டியே விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டால், பொதுமக்கள் ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும், தங்கள் பயணங்களைத் திட்டமிடுவதற்கும் வசதியாக இருக்கும். சொந்த ஊர்களுக்குச் சென்று குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் எனப் பலரும் கருதுகின்றனர்.
அனைவரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், தீபாவளி விடுமுறை குறித்து அரசு விரைவில் அறிவிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.