வருகின்ற நவம்பர் மாதம் முதல் ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை – முதலமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
Pudhucherry CM Announced 2500 Rupees Magalir Urimai Thogai
Pudhucherry CM Announced 2500 Rupees Magalir Urimai Thogai: அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது மற்றும் மகளிர் உரிமைத் தொகையை உயர்த்துவது குறித்துப் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் பேசியுள்ளார்.

வெளியான முக்கிய அறிவிப்புகள்:
- அரசுப் பணியிடங்கள்: புதுச்சேரி அரசு இதுவரை 4,500 அரசுப் பணியிடங்களை நிரப்பியுள்ளது. இன்னும் மூன்று மாதங்களுக்குள் கூடுதலாக ஆயிரம் பணியிடங்களுக்கு மேல் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
- மகளிர் உரிமைத் தொகை: தற்போது மாதந்தோறும் ரூ.1,000 பெற்று வரும் குடும்பத் தலைவிகளுக்கான மகளிர் உரிமைத் தொகை, வரும் நவம்பர் மாதம் முதல் ரூ.2,500 ஆக உயர்த்தப்படும்.
- முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை: அடுத்த மாதம் முதல் புதிதாக 10,000 பேருக்கு முதியோர் மற்றும் ஆதரவற்றோர் உதவித்தொகை வழங்கப்படும். மேலும், விண்ணப்பித்து காத்திருக்கும் 5,000 பேருக்கும் ஒரு மாதத்திற்குள் உதவித்தொகை வழங்கப்படும். இதுவரையில் 36,000 பேருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாதந்தோறும் ரூ.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.