இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! – மாதச் சம்பளம் ரூ.25,000 உடனே விண்ணப்பிங்க! Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now

இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! – மாதச் சம்பளம் ரூ.25,000 உடனே விண்ணப்பிங்க!

Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now

Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, வடபழநி அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் புதிதாகத் தொடங்கப்படும் ஓதுவார் பயிற்சிப் பள்ளிக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Vada Pazhani Andaver kovil Job Notification 2025 Apply Now

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

மொத்தம் 3 பணியிடங்கள் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.

விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2025.

தேர்வு முறை நேர்முகத் தேர்வு ஆகும்.

தேர்ந்தெடுக்கப்படும் அனைவருக்கும் மாதச் சம்பளமாக ₹25,000 வழங்கப்படும்.

பதவிகள் மற்றும் தகுதிகள்:

  1. தேவார ஆசிரியர்: 3 ஆண்டு பன்னிரு திருமுறை பாடப்பிரிவை முடித்ததற்கான தேவாரப் பாடசாலை சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. இசை ஆசிரியர்: குரலிசையில் 3 வருட பட்டயப்படிப்பு அல்லது இசையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  3. தமிழ் ஆசிரியர்: தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பு (B.A. Tamil) மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.) முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தை (https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/136/document_1.pdf) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழநி, சென்னை – 600026 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் 30.09.2025 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

Leave a Comment