விஜய் கைது செய்யப்படுவாரா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில் என்ன? Will Vijay be arrested Chief Minister M.K. Stalin responded News

விஜய் கைது செய்யப்படுவாரா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில் என்ன?

Will Vijay be arrested Chief Minister M.K. Stalin responded News

Will Vijay be arrested Chief Minister M.K. Stalin responded News: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாலை 3 மணியளவில் கரூர் சென்று உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், இந்த நிகழ்வு குறித்து மிகுந்த துயரத்தையும் வேதனையையும் வெளிப்படுத்தினார்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

Will Vijay be arrested Chief Minister M.K. Stalin responded News

முதலமைச்சரின் பேட்டி:

  • உயிரிழப்பு மற்றும் சிகிச்சை விவரங்கள்: மொத்தம் 39 உயிர்கள் பலியாகி உள்ளன. இவர்களில் 13 ஆண்கள், 17 பெண்கள், 4 ஆண் குழந்தைகள், 5 பெண் குழந்தைகள் அடங்குவர். மேலும், 51 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் (26 ஆண்கள், 25 பெண்கள்).
  • நடவடிக்கைகள்: சம்பவம் குறித்துச் செய்தி கிடைத்தவுடன் செந்தில் பாலாஜி மற்றும் மாவட்ட ஆட்சியரை உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லப் பணித்தார். அருகிலுள்ள மாவட்ட அமைச்சர்களை அனுப்பியதுடன், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோருக்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
  • விசாரணைக் கமிஷன்: இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • விஜய் கைது குறித்து முதல்வர் பதில்: செய்தியாளர்கள், “விஜய் கைது செய்யப்படுவாரா?” என்று கேள்வி எழுப்பியபோது, முதலமைச்சர், “ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலளித்தார்.
  • பொதுமக்களுக்கு வேண்டுகோள்: இத்தகைய நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
  • ஆழ்ந்த இரங்கல்: உயிரிழந்த குடும்பங்களுக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலி செலுத்துவதாகவும், இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் இனிமேலும் நடக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டார்.

Leave a Comment