கலெக்டர் ஆபீஸில் வேலை வாய்ப்பு!- மாதம் 18,000 சம்பளம் உடனே விண்ணப்பிங்க!
District Child Protection Unit Jobs 2025 Coimbatore Apply
District Child Protection Unit Jobs 2025 Coimbatore Apply : கோயம்புத்தூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (District Child Protection Unit) காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர் (Counsellor) பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் அக்டோபர் 10, 2025-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணியிட விவரங்கள்
கல்வித் தகுதி மற்றும் அனுபவம்
- கல்வித் தகுதி:
- Social Work / Sociology / Social Science / Psychology / Public Health / Counselling ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு (Graduate) பெற்றிருக்க வேண்டும்.
- அல்லது Counselling and Communication-ல் PG Diploma பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பாக அரசு அல்லது என்.ஜி.ஓ நிறுவனங்களில் ஓர் ஆண்டு பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
- கூடுதல் தகுதி: கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
- இந்தப் பணியிடங்களுக்கு 42 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
- தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- இந்த வேலைவாய்ப்பிற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தை இணையதளப் பக்கத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, கடைசித் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2 ஆவது தளம், பழைய கட்டடம், மாவட்ட ஆட்சியரக வளாகம், கோயம்புத்தூர் – 641018.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.10.2025
விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.
kovai-child-17587905978651-2025-10-03-13-28-40-NotifificationPDF