10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும் தமிழக அரசு வேலை!- உடனே விண்ணப்பிங்க – 61 காலியிடங்கள்
TN Village Assistant Recruitment 2025 Coimbatore
TN Village Assistant Recruitment 2025 Coimbatore : தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் வட்டங்கள் வாரியாக மொத்தம் 61 காலியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியானவர்கள் அக்டோபர் 15, 2025க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலிப் பணியிட விவரம் (வட்டம் வாரியாக)
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு
- கல்வித் தகுதி:
- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- வயதுத் தகுதி (01.07.2025 அன்று):
- குறைந்தபட்சம்: 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
- அதிகபட்சம் (பொதுப் பிரிவு): 32 வயது.
- BC, MBC, BCM பிரிவினர்: 39 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- SC, SCA, ST, ஆதரவற்ற விதவை: 42 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- மாற்றுத்திறனாளிகள்: அரசாங்க விதிகளின்படி கூடுதலாக 10 ஆண்டுகள் சலுகை உண்டு.
சம்பளம் மற்றும் தேர்வு முறை
- சம்பளம்: ₹11,100 – ₹35,100 (அதிகபட்சமாக)
- தேர்வு செய்யப்படும் முறை:
- வாசித்தல் மற்றும் எழுத்துத் திறன் தேர்வு
- நேர்முகத் தேர்வு
- மேற்கண்டவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பதாரர்கள் https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற கோயம்புத்தூர் மாவட்ட இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, நீங்கள் விண்ணப்பிக்கும் பணியிடம் உள்ள சம்பந்தப்பட்ட தாலுகா (வட்டார) அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.10.2025
குறிப்பு: மேலும் விரிவான விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்தைப் பெற, அதிகாரப்பூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.