10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களின் பொது தேர்வில் புதிய மாற்றங்கள்!- வெளியானது முக்கிய அறிவிப்பு!
CBSE New Announcement for Examination
CBSE New Announcement for Examination: CBSE மாணவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் புதிய மாற்றங்கள்!

புதிய விதிகளின்படி, பொதுத் தேர்வு எழுத 75% வருகைப் பதிவு கட்டாயம்!
பொதுத் தேர்வு எழுதும் CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இனிவரும் ஆண்டுகளில், 75% வருகைப் பதிவு உள்ள மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வை எழுத முடியும்.
இந்த புதிய விதிகளின்படி, மாணவர்களின் வருகைப் பதிவு, மாதாந்திரத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் மற்றும் ஒழுக்கம் ஆகியவை மதிப்பெண் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படும். மேலும், மாணவர்களின் பள்ளிக்கூட மதிப்பீட்டு ஆவணங்கள் இல்லாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், மாணவர்கள் தங்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி, பள்ளிப் பாடங்களில் தொடர்ந்து பங்கேற்பதை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.