சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025-சம்பளம் ரூ.28000 Chennai Samuga Nalthurai Job Notification 2025

Chennai Samuga Nalthurai Job Notification 2025

 

Chennai Samuga Nalthurai Job Notification 2025: சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு திட்ட சேவைகள் துறையின் கீழ் அமைக்கப்பட்ட குழந்தைகள் உதவி மையத்தில் மொத்தம் 20 தற்காலிகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

பணியிட விவரங்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர் (1 காலியிடம்):

கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ குழந்தைகள் மேம்பாடு/ மனித பொது உரிமைகள் நிர்வாகம்/ உளவியல்/ மனநல மருத்துவம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வளம் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் மற்றும் 2 ஆண்டுகள் பணி அனுபவம்.

சம்பளம்: ரூ. 28,000.

மேற்பார்வையாளர் (8 காலியிடங்கள்):

கல்வித் தகுதி: சமூகப்பணி/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ சமூகவியல்/ சமூக அறிவியல் ஆகியவற்றில் இளநிலை பட்டம்.

சம்பளம்: ரூ. 21,000.

ஆற்றுப்படுத்துநர் (1 காலியிடம்):

கல்வித் தகுதி: சமூகப் பணி/ சமூகவியல்/ உளவியல்/ பொது சுகாதாரம் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் மற்றும் ஒரு ஆண்டு பணி அனுபவம்.

சம்பளம்: ரூ. 23,000.

வழக்குப் பணியாளர் (10 காலியிடங்கள்):

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி.

சம்பளம்: ரூ. 18,000.

பொதுத் தகுதி: அனைத்துப் பதவிகளுக்கும் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப நடைமுறை

விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.10.2025.

தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

https://chennai.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சென்னை தெற்கு எண் – 1, புதுத்தெரு, வணிக வளாகம், GCC முதல் மாடி, ஆலந்தூர், சென்னை – 600016.

Leave a Comment