நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025- சம்பளம் ரூ.67,700- விண்ணப்பிக்கும் முழு விவரம்!
Supreme Court Job Recruitment 2025
Supreme Court Job Recruitment 2025: இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கோர்ட் மாஸ்டர் (Court Master) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் ரூ. 67,700 முதல் சம்பளம் வழங்கப்படும்.
பணி விவரங்கள்
- பணியின் பெயர்: கோர்ட் மாஸ்டர்
- மொத்த காலியிடங்கள்: 30
- சம்பளம்: மாதம் ரூ. 67,700 முதல்
- விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 15, 2025
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கல்வி மற்றும் இதர தகுதிகள்
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- தட்டச்சு திறன்: நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அவசியம்.
- சுருக்கெழுத்து திறன் (Short-hand): நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
- அனுபவம்: தனிச் செயலர் (Personal Secretary), சீனியர் பெர்சனல் அசிஸ்டண்ட், பெர்சனல் அசிஸ்டண்ட் அல்லது சீனியர் ஸ்டெனோகிராபர் ஆக அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: குறைந்தபட்சம் 30 வயது மற்றும் அதிகபட்சம் 45 வயது. அரசு விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு மற்றும் விண்ணப்பக் கட்டணம்
- தேர்வு முறை: சுருக்கெழுத்துத் தேர்வு (ஆங்கிலம்), கொள்குறி வகை எழுத்துத் தேர்வு, தட்டச்சு திறன் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,500 மற்றும் எஸ்சி / எஸ்டி / ஓபிசி பிரிவினருக்கு ரூ. 750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் கூடுதல் தகவல்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இணையதளமான **https://www.sci.gov.in/**-ஐப் பார்வையிடலாம்.