TN Govt Training For Construction Workers 800 Rupees Daily
🛠️ கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! தினசரி ₹800 ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி!
TN Govt Training For Construction Workers 800 Rupees Daily: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ‘ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் 2030’ இலக்கை அடைவதற்கு மனித வள மேம்பாடு மிக அவசியம் என்பதால், தமிழ்நாடு அரசு கட்டுமானத் தொழிலாளர்களின் திறனை மேம்படுத்தும் முக்கியத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ₹45.21 கோடி செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
பயிற்சி விவரங்கள் மற்றும் நன்மைகள்
பயன்பெறுவோர் இலக்கு: 50,000 கட்டுமானத் தொழிலாளர்கள்.
பயிற்சி காலம்: 7 நாட்கள்.
ஊக்கத்தொகை (சம்பளம்): ஒரு நாளைக்கு ₹800/- வீதம் (7 நாட்களுக்கு மொத்தம் ₹5,600/-).
கூடுதல் வசதி: பயிற்சி காலத்தின்போது தினசரி உணவு இலவசமாக வழங்கப்படும்.
துவக்கம்: 22.09.2025 அன்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்களால் கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ITI) துவக்கி வைக்கப்பட்டது.
பயிற்சியின் முக்கிய அம்சங்கள்
இந்த 7 நாட்கள் பயிற்சியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பின்வரும் தலைப்புகளில் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன:
புதிய தொழில் நுட்பங்கள்
டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு
சுயதொழில் வாய்ப்பு
பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலன் பேணுதல்
அயல்நாட்டு வேலைவாய்ப்பு
நிதி சேமிப்பு குறித்து விழிப்புணர்வு
பயிற்சி நிறைவு பெற்றபின், திறன் மதிப்பீடு செய்யப்பட்டு அரசால் சான்றிதழ் வழங்கப்படும்.
யாரெல்லாம் பங்கேற்கலாம்?
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கீழ்க்கண்ட 11 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்:
கொத்தனார்
கம்பி வளைப்பவர் (Bar Bender)
தச்சர் (Carpender)
மின்பணியாளர் (Electrician)
பிளம்பர்
வெல்டர்
பிளாக் ஸ்மித் (Black Smith)
வர்ணம் பூசுதல் (Painting)
ஏசி மெக்கானிக்
கண்ணாடி அமைத்தல் (Glass Work)
சலவைக்கல் ஒட்டுதல் (Tile Layer)
பயிற்சியில் கலந்து கொள்வது எப்படி?
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தொழிலாளர்கள் பின்வரும் நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்:
தொடர்பு கொள்ள வேண்டிய இடம்: உங்கள் மாவட்டத்தின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அலுவலகத்தை (District Skill Development Training Office) அணுகவும்.
விண்ணப்பம் பெறுதல்: தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் திறன் பயிற்சிக்கான விண்ணப்பத்தைப் பெறவும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கீழ்க்கண்ட ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்:
நலவாரிய அட்டை நகல்
ஆதார் அட்டை நகல்
வங்கி கணக்கு முதல் பக்க நகல்
கல்வி சான்றிதழ்
குடும்ப அட்டை
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
📣 தற்போதைய நிலை: 22.09.2025 முதல் 18.11.2025 வரையில் வழங்கப்பட்ட பயிற்சியில் இதுவரை 21,334 கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். எஞ்சியுள்ள இலக்கை டிசம்பர் 2025-க்குள் நிறைவு செய்யத் தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.