சமுதாய வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை! TNSRLM Recruitment 2025 Dindugal Apply Online

சமுதாய வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு!- விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!

TNSRLM Recruitment 2025 Dindugal Apply Online

TNSRLM Recruitment 2025 Dindugal Apply Online: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) காலியாக உள்ள சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNSRLM Recruitment 2025 Dindugal Apply Online

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

முக்கிய தகவல்கள்

  • பணியின் பெயர்: சமுதாய வள பயிற்றுநர் (Community Resource Person)
  • நிறுவனம்: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
  • பணியிடம்: திண்டுக்கல் மாவட்டம்
  • காலியிடங்கள்: பல்வேறு
  • சம்பளம்: தமிழ்நாடு அரசின் விதிமுறைப்படி வழங்கப்படும்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17, 2025

TNSRLM Recruitment 2025 Dindugal

கல்வி தகுதியும் வயது வரம்பும்

  • கல்வி தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு எதுவும் இல்லை.

தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை

  • தேர்வு முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை.
  • விண்ணப்பிக்கும் முறை:
    1. விண்ணப்பப் படிவத்தை https://dindigul.nic.in/ என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
    2. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 17, 2025, மாலை 5:45 மணிக்குள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அல்லது வட்டார அளவிலான கூட்டமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு குறித்து மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Leave a Comment