விஜய் கடும் வேதனை!- இதயம் நெருங்கி போய் இருக்கிறேன்- என்று பதிவு வெளியிட்டுள்ளார்!
Vijay Condolence Message For Karur Stampede Trend News Sep 28
Vijay Condolence Message For Karur Stampede Trend News Sep 28: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் உயிரிழந்தது மற்றும் 60 பேர் சிகிச்சையில் இருப்பது குறித்து அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் இரங்கல் பதிவு
இந்தத் துயரச் சம்பவத்தால் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாகத் தெரிவித்த விஜய், தனது பதிவில் குறிப்பிட்டதாவது:
“இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.”
“கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.”
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில், பல பிரபலங்களும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.