மாதம் ரூ.20,000 சம்பளத்தில் அரசு வேலை! பெண்களுக்கு தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!
District Social Welfare Department Tiruvallur Job Recruitment 2026
District Social Welfare Department Tiruvallur Job Recruitment 2026: திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒரு சுவாரசியமான வேலைவாய்ப்புச் செய்தி வெளியாகியுள்ளது! தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Centre) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விபரங்களை கீழே விரிவாகக் காண்போம்.
காலிப்பணியிடங்கள் மற்றும் தகுதி விபரங்கள்:
திருவள்ளூர் மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் செயல்படும் சேவை மையங்களில் மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான வயது வரம்பு 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
1. தொழில்நுட்ப பணியாளர் (IT Staff)
கல்வித்தகுதி: கணினி அல்லது ஐடி துறையில் பட்டயப் படிப்புடன் கூடிய இளங்கலைத் பட்டம் (Bachelor’s degree with a diploma in computers/IT). தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனுபவம்: அரசு அல்லது அரசு சாரா அமைப்புகளில் பணிபுரிந்த அனுபவம் தேவை.
மாத சம்பளம்: ரூ. 20,000
2. வழக்கு பணியாளர் (Case Worker)
கல்வித்தகுதி: சமூகப்பணி (Social Work), சமூகவியல் (Sociology), சமூக அறிவியல் (Social Science), உளவியல் (Psychology) அல்லது சட்டம் (Law) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு இளங்கலைத் பட்டம் (UG Degree) பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்: பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிரான அரசு/அரசு சாரா அமைப்புகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம்.
மாத சம்பளம்: ரூ. 18,800
3. பல்நோக்கு உதவியாளர் (Multipurpose Helper)
கல்வித்தகுதி: தமிழ் எழுத, படிக்க மற்றும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் (10-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).
மாத சம்பளம்: ரூ. 10,000
முக்கிய நிபந்தனைகள்:
பெண்களுக்கு மட்டும்: இப்பணியிடங்கள் அனைத்தும் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன.
உள்ளூர்வாசிகள்: திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
சுழற்சி முறை பணி: இம்மையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதால், சுழற்சி முறையில் (Shift System) பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் திருவள்ளூர் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tiruvallur.nic.in என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 22.06.2026-க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூக நல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
2-வது தளம்,
திருவள்ளூர் மாவட்டம் – 602001.
📞 உதவி எண்: இவற்றுள் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 044-29896049 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
